This entry was posted on Saturday, February 7th, 2009 at 7:38 pm and is filed under நிகழ்வுகள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
This entry was posted on Saturday, February 7th, 2009 at 7:38 pm and is filed under நிகழ்வுகள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
காங்கிரஸ் இருக்குமிடத்தில் என்னால் பணியாற்றமுடியாது என்று தலைவரிடம் நேரில் சொல்லிவிட்டு நல பேரவையில் பங்கு எடுக்காதவரையில் மிக்க மகிழ்ச்சி.
பாதுகாப்பு இயக்கத்தில் அழைப்பில்லை என்று சொல்வதில் ஓர் அரசியல் இல்லையா?
போட்டி அரசியலும் துரோக அரசியலும் அங்கே இருக்கும் என்று தெரியாமலா தமிழின தலைவரிடம் சேர்ந்தீர்கள்?
நல்ல வேளை- ஆட்சியிலிருந்து ராஜினாமா வேண்டாம் என்று தம்பி சுபவீ கேட்டதால் ராஜினாமா இல்லை என்ற பழியிலிருந்து தப்பித்தீர்கள்.
கலைஞரோடு ஐக்கியமாகி இருந்தீர்கள். அதனால்தான் பாதுகாப்பு இயக்கத்திலிருந்து அழைப்பு இல்லாமலிருந்துருக்கும் என்பது கூடவா தங்களுக்கு புரியவில்லை.
கலைஞரிடம் யாரும் ஆட்சியை இழந்துவிட்டு வாருங்கள் என்று சொல்லவில்லை. சோனியாவிடம் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி ராஜீவைபற்றி மட்டுமே பார்க்காமல், அவருக்கும் பின் பிறந்த இந்த தலைமுறை தமிழினத்தை காப்பாற்ற, இந்திய அரசின் பாராமுகத்தை சரிசெய்ய, முகமூடி அணிந்த இலங்கை ராணுவமாக செயல்படுவதை தடுக்க, மிக மிக தீவிர முயற்சி செய்து நடவடிக்கை எடுக்க செய்ய வேண்டும் என்பதே தமிழ் நாட்டு மக்களின் விருப்பம்.
ஆனால் கலைஞர் செய்வது என்ன? முதலில் ஒவ்வொரு கியராக டாப் கியர் வரை சென்றார். அங்கு எந்த ரெஸ்பான்சுமே இல்லை என்றதும் மீண்டும் ரிவர்ஸ் கியரில் போகிறார்.
உலக தமிழ் மக்களின் தலைவர் செய்யும் காரியமா இது? இத்தனை வருட அரசியல் முழக்கங்கள் எல்லாம் வெற்று அரசியல்தானா? ஒவ்வொரு தமிழனின் உள்ளமும் கொதித்து தன் கையாலாகாதத்தனத்தை நினைத்து குமுறிக்கொண்டு உள்ளான் என்பது அவரால் அறியமுடியாதது அல்ல.
பிரணாப் முகர்ஜின் பேச்சாலேயே, இந்திய தேசத்தில் தமிழனின் பிடிமானம் நிலை மாறப் போகிறது. இதெல்லாம் எடுத்து சொல்ல வேண்டாமா?
காங்கிரசும் திமுக்காவும் கூட்டு என்றாலும் தேமுதிகாவை சேர்த்தாலும் எந்த பார்முலா போட்டாலும் காங்கிரஸ் மீதுள்ள வெறுப்பிற்கு திமுக்காதான் பலியாக போகப்போகிறது. நீங்களோ என்ன செய்ய முடியும்?
மக்கள் மீது சிறிதளவாது அக்கறையுள்ள அமைப்புகளுடன் இணைந்து செயல்படுங்கள்.
இது எங்கள் அவா.